`நிபா’ அறிகுறியால் அனுமதி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் தொழிலாளி திடீர் சாவு

புதுச்சேரி:  கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இது கேரள மாநிலத்ைத ஒட்டியுள்ள தமிழகம், புதுச்சேரியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடலூரை சேர்ந்த நடராஜன் (55) என்பவர், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில்  கூலி வேலை செய்து வந்தார். அங்கு அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் திரும்பினார்.

இதையடுத்து, கடந்த 10ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் நிபா வைரஸ் தாக்குதலுக்கான சில அறிகுறிகள் தென்பட்டது. இதனால், தனி வார்டில் சிகிச்சை  அளிக்கப்பட்டது. நடராஜனின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனேவில் உள்ள மத்திய அரசின் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவு கடந்த 14ம் தேதி காலை ஜிப்மருக்கு வந்தது. அதில் நடராஜனுக்கு நிபா வைரஸ்  தாக்குதல் இல்லை என தெரியவந்தது. இருப்பினும் அவருக்கு மூளைகாய்ச்சல் மற்றும் சில தொற்று இருந்ததால் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், நேற்று அவர் இறந்தார்.

Related Stories: