ஆவடி: பட்டாபிராமில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆவடி அடுத்த பட்டாபிராம், மகாத்மா காந்தி ரோட்டில் எச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் மையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நள்ளிரவு 2 மணி அளவில் ஏடிஎம் மையத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதை கேட்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வெளியே வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்துக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்து இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், அந்த நபரை ஏடிஎம் மையத்தின் உள்ளே வைத்து ஷட்டரை இழுத்து மூடிவிட்டு பட்டாபிராம் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்தார்.