வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆய்வு என்ற பெயரில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் இரவு முழுவதும் தங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சந்திரசேகரராம் (51) என்பவர் மலை ஏறினார். இரவு முழுவதும் மலையில் தங்கிய அவர் நேற்று காலை கீழே இறங்கினார். இவர் தாணிப்பாறை கேட்டில் டோக்கன் மட்டும் வாங்கிவிட்டு மலை ஏறியதாகவும், வனத்துறையிடம் உரிய அனுமதி வாங்கவில்லை என்றும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அடிவாரத்தில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது, நியூசிலாந்து நாட்டில் இருந்து வருவதாகவும், ஆய்வுக்காக சதுரகிரி மலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.