சென்னை: தமிழக உரிமைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அடகு வைத்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் புதிய மொந்தையில் பழைய கள் அடைக்கப்பட்டுள்ளதைத்தான் நினைவூட்டுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முனைப்புடன் எதிரொலிக்க தவறிவிட்டார். தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்துவிட்டதாக முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். நீட் தேர்வு,மேகதாது அணை, மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள மாநில நிதி அத்தனைக்கும் தீர்வு காண வாய்ப்பு கிடைத்தும் முதல்வர் தவறவிட்டுவிட்டார்.