சென்னை: மாதவரம் காவலர் குடியிருப்பில் உள்ள செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வீட்டில் 13 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது நகை கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.