மோகாதிஷு: சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள பாராளுமன்றம் அருகே ஒரு பிரதான சாலையில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.