துபாய்: உலகிலேயே மிகவும் அதிகப்பட்சமாக குவைத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை 145.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.. பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகபட்சமாக குவைத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை 145.4 டிகிரி வெயில் பதிவானது. ஆனால், பதிவான வெயிலைக் காட்டிலும் உணரப்பட்ட வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் சாலைகளில் தார் உருகியநிலையில் காணப்பட்டது. மக்கள், வீடுகளில் முடங்கினர். போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. நிழலான இடங்களில் கூட கடுமையான வெப்பநிலை உணரப்பட்டது. சவுதி அரேபியாவில், அல் மஜ்மா என்ற இடத்தில் 131 டிகிரி வெப்பம் நிலவியது.