சென்னை: யுசிஏஎல்-டிஎன்டிஏ கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் எம்சிசி கிளப் அணியின் சாய் சம்ஹிதா/முகம்மது ஃபரிஷ் இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும், யுசிஏஎல் நிறுவனமும் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியை நடத்தியது. இதில் சென்னையில் உளள கிளப்கள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) சாய் சம்ஹிதா/முகம்மது ஃபரிஷ் இணையுடன், நுங்கம்பாக்கம் டென்னிஸ் கிளப்(என்டிசி) சாய் அவந்திகா/மதன்குமார் இணை மோதியது. முதல் செட்டை எம்சிசி அணியும், 2வது செட்டை என்டிசி அணியும் கைப்பறறின. பின்னர் பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டை எம்சிசி அணி போராடி வென்றது.