சீனா: சீனாவின் கிழக்கு பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் தொடர்புகளற்று தனித்து விடப்பட்டுள்ளனர்.