பெங்களூரு: பெங்களூருவில் 2000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் முகமத் கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் 400 கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பி தராததால் தாம் தற்கொலை செய்ய போவதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தற்கொலை செய்ய போவதாக வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவியது. நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் ஐ.எம்.ஏ. என்ற இஸ்லாமிய வங்கியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிறுவனம் 2000 கோடி ரூபாய் நிதியை திரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் உரிய நேரத்தில் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி தராததால் கடந்த சில மாதங்களாக கடும் சிக்கல் நீடித்து வந்துள்ளது.