×

குறுவை சாகுபடி பொய்த்துப்போன 8-ம் ஆண்டு நினைவஞ்சலி... காவிரி டெல்டாவில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகையில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு ஏற்றவகையில், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை மொத்தம் 330 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

ஆனால் பருவமழை பொய்த்துப்போவது உள்பட பல்வேறு காரணங்களால் 2012 முதல் கடந்த 8 ஆண்டுகளாக உரிய காலத்தில்  பாசனத்துக்காக நீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஜூலை 17ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. நடப்பாண்டு கோடைகாலத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து  கோரிக்கை விடுத்தனர். நடப்பு நீர் பாசன ஆண்டில் தொடர்ந்து 8வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போகிறது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Cauvery delta , Cauvery, Crops, Farmers, Trichy, Nagai, Struggle, Mettur Dam
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...