மலைக்கோட்டை மாநகரில் மையப்பகுதியில் காய்கறிக்கடைக்கு பெயர் போன பகுதியில் உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசூல் மழையில் குளித்து வருகிறார். டாஸ்மாக் பார் மாமூல், புகாரின் பேரில் விசாரணை நடத்தி கட்டப்பஞ்சாயத்து பேசி இருதரப்பினரிடமும் வசூல் செய்து கல்லா கட்டி வருகிறார். இவருக்கு டாஸ்மாக் பார்களில் வரும் மாமூல் அதிகம். இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை பூட்டியபின் அதே கடையின் பார்களில் மது விற்பனை கனஜோராக நடக்கிறது. மேலும் இரவு நேர காய்கறிக்கடைகள் இருப்பதால் அங்கு பணியில் உள்ள கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள் என ஏராளமானோரிடமிருந்து கூடுதலாக கிடைக்கும் வசூலில் இன்ஸ்பெக்டரும், உரிமையாளர்களும் சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடைவீதியில் நடுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் நண்பருடன் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார்.