சென்னை: பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழகத்தை வஞ்சித்தது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வடசென்னை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வைகோவை சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, மக்களோடு இரு என்று அண்ணா சொன்னதை திமுக தலைவர் ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்று கூறினார். மாநிலங்களவைக்கு மதிமுக சார்பில் யார் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை கட்சி முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறி என விமர்சனம் செய்துள்ளார்.