×

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 22 சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளனர். தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர்.  22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : by-election ,Gazette , By-election, assembly constituency, members' names, gazette, release
× RELATED தமிழ்நாட்டில் புதிய 4...