கொழும்பு: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுகவுக்கு இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருணாநிதி மறைவுக்கு பின் பொருத்தமானவரிடம் திமுக ஒப்படைக்கப்பட்டிருப்பது வெற்றியால் நிரூபணமாகியுள்ளது என கூறியுள்ளார். இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் மு.க.ஸ்டாலின் வருகை தரவேண்டும் என இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.