மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு நிறைவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்து 39,683 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81 புள்ளிகள் அதிகரித்து 11,925 புள்ளியில் முடிவடைந்தது.