பழநி: விடுமுறை தினத்தின் காரணமாக பழநி கோயிலுக்கு நேற்று பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. சாமி தரிசனத்திற்கு 2 மணிநேரம் காத்திருந்தனர். கோடை விடுமுறையின் காரணமாக பழநி கோயிலில் நேற்று பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறைப்படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.