இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் மே 29-ம் தேதி பதவியேற்பு

சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் வரும் புதன் கிழமை பதவியேற்க உள்ளார். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் மகத்தான வெற்றியை பெற்றது. அதில் அதிமுக கூட்டணி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 22 சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது.

அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு வரும் 29-ம் தேதி பதவியேற்பு விழா நடத்தப்பட உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க உள்ளர். இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பின்னர் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்கள் நலப்பணிகளை உடனடியாக தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: