சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் வரும் புதன் கிழமை பதவியேற்க உள்ளார். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் மகத்தான வெற்றியை பெற்றது. அதில் அதிமுக கூட்டணி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 22 சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது.