×

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம்.... பயணிகள் அவதி

சென்னை: மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடங்கியது. சென்னை விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திறப்பு விழா நடந்தது. ஆனாலும் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு முனையம் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரலிலும், சர்வதேச முனையத்தில் புறப்பாடு பகுதி 2013 செப்டம்பரிலும் செயல்பட தொடங்கின. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் ஏற்பட்ட இணைய தள சேவை முடக்கம் காரணமாக அங்குள்ள பணிகளில் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் தெரியாததால் பயணிகள் அவதி பட்டு வருகின்றனர். இணையவழி பயணச்சீட்டுகள், விமான நிலைய பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகளும் முடங்கின. இந்த விவரங்களை விமான நிலைய அதிகாரிகள் துண்டுச் சீட்டில் எழுதி தருவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக 20க்கும் மேற்பட்ட விமானங்கள் உரிய நேரத்திற்கு இயக்க முடியாமல் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

Tags : passengers ,airport ,Chennai , Chennai, Airport, Internet Service, Freezing
× RELATED சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம்