திருச்சி: தமாகா சந்தித்த 2 பொது தேர்தலிலும் தோல்வி அடைந்ததால், நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2014ல் அக்கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். தமிழகத்தில் 2016ல் நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாசன் விரும்பினார். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதால், அதை ஏற்காத வாசன் கடைசி நேரத்தில் மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். அப்போது, 24 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா, ஒரு இடத்தில் கூட ெவற்றி பெறவில்லை.இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக- பாஜ கூட்டணியில் தமாகா இணைந்தது. அந்த கட்சிக்கு தஞ்சை மக்களவை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. அங்கு போட்டியிட்ட தமாகா வேட்பாளர் நடராஜன் தோல்வியை தழுவினார். தமாகா சந்தித்த 2 பொது தேர்தல்களிலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல், வெற்றிக்கணக்கை தொடங்காமல் உள்ளது. இது தமாகா நிர்வாகிகள், தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.