×

1942-1947ல் இருந்தது போல் அடுத்த 5 ஆண்டுகள் முக்கியமான காலகட்டம்: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

அகமதாபாத்: ‘‘அடுத்த 5 ஆண்டுகளில், உலக நாடுகளின் பட்டியலில், இந்தியா தனக்குரிய இடத்தை பிடிக்கும்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் வெற்றி விழா நிகழ்ச்சி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள கமதாபாத்தில் நேற்று நடத்தப்பட்டது. குஜராத் பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் நடந்த தீ விபத்தில் 22 மாணவர்கள் பலியானதால்,  இந்த விழா நேற்று ஆரவாரம் இல்லாமல் எளிமையாக நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கூறியதாவது:நேற்று வரை, இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்ற இரண்டு விதமான மனநிலையில் இருந்தேன். ஒருபுறம் மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எனது தாயிடம் ஆசி பெற வேண்டும். இது என் கடமை.  

மறுபுறம் சூரத் தீ விபத்தில் பலியானவர்களுக்காக இரக்கப்பட வேண்டியுள்ளது. குழந்தைகளை பறிகொடுத்தவர்களின் குடும்பங்களின் சோகத்தை எந்த வார்த்தைகளும் குறைக்காது. நாட்டின் வரலாற்றில் அடுத்த 5 ஆண்டுகள் மிக முக்கியமானதாக இருக்கும். கடந்த 1942 முதல் 1947 வரையிலான காலகட்டம் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ அந்த அளவு முக்கியமானதாக இருக்கும். உலக நாடுகளின் அரங்கில்  இந்தியா தனக்குரிய இடத்தை பிடித்து முக்கியத்துவம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.1942 முதல் 1947 வரையிலான காலகட்டம் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ அந்த அளவு நாட்டின் வரலாற்றில் 5 ஆண்டுகள் முக்கியமானதாக இருக்கும்.





Tags : Modi ,speech ,Gujarat , Next 5 years,Prime Minister, Modi
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...