×

அண்ணன் தனியாக போராடியபோது எங்கிருந்தீர்கள்?: பிரியங்காவும் கேள்வி

நேற்று முன்தினம் 4 மணி நேரம் நடந்த காங்கிரஸ் செயற் குழு கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் பல முறை ஆவேசப்பட்டு பேசினார் என தெரியவந்துள்ளது. ராகுலை கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்து கொண்டிருந்த நேரத்தில் பேசிய பிரியங்கா, ‘‘கட்சி தோல்விக்கு காரணமானவர்கள் எல்லாம் இங்கு உட்கார்ந்திருக்கிறோம். என் அண்ணன் தனியாக போராடியபோது, நீங்கள் எங்கிருந்தீர்கள். ரபேல் விவகாரத்தில், ‘காவாலாளி திருடன்’ என்ற அவரது கோஷத்தை யாரும் ஆதரிக்கவில்லை. அண்ணன் ராஜினாமா செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், பா.ஜ.வின் பொறியில் சிக்கியதாகிவிடும்’’ என்றார்

Tags : brother ,Priyanka , Brother, Priyanka, question
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...