சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திருமாவளவனுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.