ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பாய்மரப் படகு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அங்குள்ள தர்ம முனிஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இப்போட்டியில், ஏராளமான படகுகள் கலந்துகொண்டன. கடலில் அதிவேகமாக சீறிக்கொண்டு சென்ற படகுகளை, கரையிலிருந்த ஏராளமானோர் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். அரசு மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்ட வீரர்கள், அந்த படகுகளை இயக்கினர்.