சென்னை: தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் கூறினார். அதிமுகவை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டி விட்டார்கள், மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தயாநிதிமாறன் கூறியுள்ளார்.