பூட்டிய வீட்டுக்குள் தம்பதி பிணம்

சென்னை:  சென்னை வடபழனி பஜனை கோயில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர்கள் முகமது யூசுப்(80)-  விஜயா(65) தம்பதி.  இந்நிலையில் 2 நாட்களாக பூட்டிக்கிடந்த அவர் களது வீட்டில் இருந்து நேற்றிரவு,   துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில்  அசோக் நகர்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தம்பதிகள் முகம்மது யூசுப்- மனைவி விஜயா ஆகியோர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர்.அவர்கள் கொல்லப்பட்டனரா தற்கொலையா என விசாரிக்கின்றனர்.

Related Stories: