×

மேற்குவங்கத்தில் பாஜ - திரிணாமுல் மோதலால் வன்முறை

கொல்கத்தா: மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போதே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ தொண்டர்கள் சராமரியாக மோதிக் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள்  வெளியானபோதும், மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் ஒருவர் பலியானார் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து ஆளுநர் கேசரிநாத் திரிபாதி விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘மாநிலத்தின் சிறந்த  பண்பாட்டை கருத்தில்கொண்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.



Tags : conflict ,West Bengal , West Bengal, Bhajan - Trinamul, Violence , conflict
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு