×

மனைவி, தம்பியை சரமாரி கத்தியால் குத்தியவர் கைது

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (34). இவரது தம்பி ராமச்சந்திரன் (32). நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், தம்பி ராமச்சந்திரனுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினார்.  இதை சந்திரசேகரனின் மனைவி ரேவதி (31) தடுக்க முயன்றுள்ளார். அவருக்கும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிசிச்சையளிக்கப்படுகிறது. சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர்.



Tags : Wife, brother, Arrested , knife
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...