×

அதர்ம வழியில் சென்ற சந்திரபாபு இப்போது பலனை அனுபவிக்கிறார்: ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு

திருமலை: ‘‘நாடே கூர்ந்து கவனிக்கும் வகையிலும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் அரசு நிர்வாகத்தை தருவேன்,’’ என எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.புதிதாக தேர்வான எம்எல்ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சதவீதம் வாக்கு வித்தியாசத்தில், அதாவது 5 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றதால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தோம். அதே 5 ஆண்டு காலத்திற்கு பிறகு 151 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.  கடந்த 5 ஆண்டுகளில் பல தர்ணாக்கள் செய்தோம். பல வழக்குகளை எதிர்கொண்டோம், 3,600 கிமீ பாத யாத்திரையும் மேற்கொண்டோம். ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காக செயல்பட்டு வந்தோம்.

மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். 2024ம் ஆண்டு நடைபெறக் கூடிய தேர்தலிலும், வரும் 5 ஆண்டுகளில் நாம் செய்யக்கூடிய பணிகளை பார்த்து மக்கள் நமக்கு வாக்களிக்க வேண்டும். இதை அனைவரும் நினைவில்  கொள்ள வேண்டும். யாரும் எதிர்பார்க்காத ஒரு அரசு நிர்வாகத்தை நான் தருவேன். இந்த நாடே நமது அரசை கூர்ந்து கவனிக்கும் வகையில் எனது அரசு நிர்வாகம் இருக்கும். இதற்கு நீங்கள் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு 2014ம் ஆண்டு அதர்மமான முறையில், நம் கட்சியில் வெற்றி பெற்ற 23 எம்எல்ஏ.க்கள், 3 எம்பி.க்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கினார். தற்போது, கடவுள் அதே மே 23ம் தேதி 23 எம்எல்ஏ.க்கள், 3 மக்களவை  எம்பி.க்களை மட்டுமே சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கி இருக்கிறார் என்றார்.



Tags : Chandrababu ,Jagan Mohan Reddy , Chandrababu , Adharma route, Jegan Mohan Reddy ,talks
× RELATED முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட...