புதுடெல்லி: நாடு முழுவதும் பல மாநிலங்களில் எம்எல்ஏ.க்ளாக இருந்த 49 பேர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், 14 மாநிலங்களில் அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதம் 16 மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களாக உள்ள 49 பேர், எம்.எல்.சிக்களாக உள்ள 2 பேர், மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள 4 பேர், நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால், இவர்கள் தற்போது வகிக்கும் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் இந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அரியானா மாநிலங்களில் அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இங்கு காலியாகும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாது. ஆனால், 14 மாநிலங்களில் 49 எம்எல்ஏ மற்றும் எம்.எல்.சி பதவிக்கு இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உள்ளது.