×

மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம் தலையை துண்டித்து ரவுடி கொலை: பையில் எடுத்து சென்ற கும்பலுக்கு வலைவீச்சு

மதுரை:   மதுரை, திருநகரை சேர்ந்தவர் சவுந்தர் என்ற சவுந்தரபாண்டியன் (40). பிரபல ரவுடி. இவர், மதுரை முத்துப்பட்டி, அய்யனார்புரம் ஆசிரியர் காலனியில் உள்ள தனது சித்தப்பா லோகநாதன் வீட்டில் நேற்று மாலை அமர்ந்திருந்தார்.  அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் புகுந்து சவுந்தரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற லோகநாதனுக்கும் தலையில் சரமாரி வெட்டு விழுந்தது. மேலும், ஆத்திரம் தீராத கும்பல், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சவுந்தரின் தலையை வெட்டிப் பையில் எடுத்துக்கொண்டு காரில் தப்பினர். கூச்சல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரை ரவுடிக்கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் மிரட்டி  விட்டுச் சென்றனர். சுப்பிரமணியபுரம் போலீசார் மற்றும் துணை கமிஷனர் சசிமோகன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். படுகாயமடைந்த லோகநாதனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  

போலீசார் கூறுகையில், ‘‘கொலையான சவுந்தர் மீது சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம், செல்லூர், ராமநாதபுரம் காவல்நிலையங்களில் 4 கொலை உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1998 முதல் 2015 வரை பல்வேறு  குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 2003ல் மதுரை நகர் ரவுடி பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதில், ஏதாவது பாதிக்கப்பட்ட ஒரு கும்பல்தான் கொலை செய்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது’’ என்றனர். படுகாயமடைந்த லோகநாதன், மதுரை அழகப்ப நகரில் உள்ள அம்மன் கோயில்  பூசாரியாக உள்ளார்.முட்புதரில் தலை மீட்பு: கொலை செய்யப்பட்ட சவுந்தரின் தலையை சாக்குப்பையில் வைத்து காரில் கொண்டு சென்ற கும்பல், மதுரை பழங்காநத்தம் மேம்பாலத்தின் கீழே, ஜெய்ஹிந்த்புரம் செல்லும் வழியில் முட்புதரில் வீசிவிட்டு சென்றது.  அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : barracks ,Madurai ,Rowdy , horror, barbarism, killing , gang:
× RELATED அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க...