×

சென்னையை சேர்ந்த பைலட் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரியும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையைச் சேர்ந்த பைலட் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபரில் 136 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து பறக்க முற்பட்டபோது தாழ்வாகச் சென்று ஓடுதளத்தில் இருந்த சிக்னல் ஆண்டனா மற்றும் திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலை அருகே உள்ள விமான நிலைய சுற்றுச்சுவர் ஆகியவற்றை சேதப்படுத்திச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக விமானத்தின் பைலட்டாக பணிபுரிந்த சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.கணேஷ்பாபுவின் பைலட் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பைலட் டி.கணேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி, டெல்லி விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Air India ,Chennai , Court,orders notice,Air India,respond,petition, Chennai
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...