பூந்தமல்லி: வளசரவாக்கம் பகுதியில் கோகைன் போதை பொருளை தயாரித்து விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் கோகைன் எனப்படும் ேபாதை பவுடர் தயாரித்து, வளசரவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில், கல்லூரி மாணவர்கள், ஐ.டி.ஊழியர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், நேற்று காலை ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது, அங்கு, கோகைன் எனப்படும் போதை பவுடரை போலியாக தயாரிப்பது தெரிந்தது.