×

ஓடும் காரில் திடீர் தீ விபத்து: தாம்பரத்தில் பரபரப்பு

தாம்பரம்: தாம்பரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர், கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் வினோத் (38). இவர் நேற்று காலை தாம்பரத்தில் உள்ள அவரது உறவினரை பார்ப்பதற்காக தனது மகளுடன், காரில் தாம்பரம் வந்தார். பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.  தாம்பரம் அருகே சென்றபோது, காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால், காரை நிறுத்திவிட்டு, வினோத் தனது மகளுடன் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் வீரர்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.முதற்கட்ட விசாரணையில், பேட்டரியில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது. சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : fire , running, car, Sudden ,fire ,accident
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...