எல்இடி டி.விக்களை திருடியவர் கைது

ஆவடி: ஆவடி, காமராஜர் நகர், முதல் தெருவை சேர்ந்த நரேஷ் (31) என்பவரின் வேனில் இருந்த எல்.இ.டி டிவி திருடு போனது. புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று அதே பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக எல்.இ.டி  டிவி ஒன்றை எடுத்து சென்றார். அவரை பிடித்து விசாரித்தபோது, செங்குன்றம், அம்பேத்கர் நகர், பெருமாள் அடிப்பாதம் பகுதியைச் சேர்ந்த துரை (27) என்பதும்,  நரேஷ் வேன் உள்ளிட்ட பல வேன்களில் எல்.இ.டி டிவியை திருடியதும் தெரிந்தது.அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 எல்.இ.டி டிவிக்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: