×

ஓட்டு எண்ணிக்கை நாளில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

தாம்பரம்: நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி நேற்று முன்தினம் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி மேற்கு தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் மாநகர பேருந்து பணிமனை  எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது மது விற்பனை செய்வது தெரிந்தது. இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டம், செட்டிகுளத்தை சேர்ந்த முனீஸ் (32) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த சங்கிலி துரை (28) ஆகிய  இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 மது பாட்டில்கள் மற்றும் ₹5000 பறிமுதல் செய்யப்பட்டது.



Tags : counting , votes, Liquor sale,arrested
× RELATED சென்னை பெருங்குடியில் லாரி மோதி...