×

என்னம்மா... இப்டி பண்ணிட்டீங்களேமா! தேம்பி அழுத சுயேட்சை, தேற்றிய அதிகாரிகள்

பஞ்சாப்: மக்களவை தேர்தலில் தனக்காக பதிவான மொத்த வாக்குகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் துக்கம் தாங்காமல் தேம்பி தேம்பி அழ தொடங்கினார். தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வடிவேலின் பிரவல வசனம் ஒன்று, “வேணாம்... விட்டுறுங்க, நான் அழுதிருவேன்”என்பதாகும். அப்படி ஒரு சம்பவம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதியில் அரங்கேறியுள்ளது. பஞ்சாபை சேர்ந்தவர் நீட்டு சட்டேரன் வாலா.

ஜலந்தர் மக்களவை சுயேட்சை வேட்பாளரான இவர், நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தார். அப்போது  மின்னணு வாக்குகள் எண்ண தொடங்கியதும், அவருக்காக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிந்து தேம்பி தேம்பி அழ தொடங்கினார். இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, “என் குடும்பத்தில் மொத்தம் 9 வாக்குகள் உள்ளன.

ஆனால், எனக்கு 5 வாக்குகள் தான் கிடைத்துள்ளது. இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது”என கூறிவிட்டு மீண்டும் தேம்ப தொடங்கினார். தனது குடும்பத்தை சேர்ந்தவர்களே தனக்கு வாக்களிக்கவில்லை என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதோடு, இனிமேல் எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்றும் கூறினார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : Freeman ,Independent , Dirty, independent, supernatural, officers
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு...