ரூ.70 ஆயிரம் லஞ்சம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் பேக்கரி நடத்துபவர் சரவணன். இவரை விசாரணைக்காக அழைத்து சென்ற ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், அவர் மீது வழக்கு போடாமல் இருக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டார். சரவணன், கடந்த 22ம் தேதி கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயனம் தடவிய ரூ.70 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் சரவணன் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.

Related Stories: