சென்னை: வெற்றியை தொடர்ந்து பாஜ ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று டெல்லி செல்கின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் 300கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.