பாஜ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ், ஓபிஎஸ் இன்று டெல்லி பயணம்

சென்னை: வெற்றியை தொடர்ந்து பாஜ ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று டெல்லி செல்கின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் 300கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்கின்றனர். பின்னர் மாலை நடைபெறும் கூட்டத்தில் இருவரும் பங்கேற்கின்றனர். அந்த கூட்டத்தில் வெற்றி தோல்வி குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரியவருகிறது. அதைதொடர்ந்து அமைச்சரவை உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனைகளும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: