நிதியமைச்சராக ஜெட்லி மறுப்பு?

2014 மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்ற பிறகு, மத்திய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டார். ஆனாலும், கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு பிறகு ஜெட்லியின் உடல் நிலை மோசமானது. கடந்த பிப்ரவரியில் புற்றுநோய் சிகிச்சை பெற்றதால், இடைக்கால பட்ஜெட்டை ஜெட்லி தாக்கல் செய்ய முடியவில்லை. அதனா்ல், இந்த முறை நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க ஜெட்லி விரும்பவில்லை என கூறப்படுகிறது. அந்த வாய்ப்பு அமித்ஷாவுக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது.

Related Stories: