மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 206 கோடி டாலர் சரிந்து, ரூ.41,800 கோடி டாலராக ஆனது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு ரூ.42,006 கோடி டாலராக இருந்தது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு சரிந்ததே இதற்கு காரணம். மேற்கண்ட வாரத்தில் வெளிநாட்டு கரன்சி மதிப்பு 39,223 கோடி டாலரில் இருந்து 39,020 கோடி டாலராக சரிந்துள்ளது.