வீதிக்கு வந்தது வீட்டுச் சண்டை பிள்ளைகளின் காதணி விழாவுக்கு செய்முறை செய்யாதீங்க...

மதுரை:  மதுரை, செல்லூர் மேலத்தோப்பை சேர்ந்தவர் கர்ணன். இவரது பெயரில் ‘பொது அறிவிப்பு’ என்கிற போஸ்டர் அடித்து மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘நானும் எனது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம். எனது விருப்பத்திற்கு மாறாக எனது பிள்ளைகளுக்கு காதணி விழா ஏற்பாடு நடக்கிறது. இந்த விழாவுக்கும் எனக்கும், எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆகையால் என்னை சார்ந்த உறவுகள் மற்றும் ஏற்கனவே செய்முறை செய்த நபர்கள் யாரும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவிக்கிறேன்...’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் தாங்கள் வழங்கியதை, பெறும் வகையில் உறவுகள் மூலம் ‘மொய்’ தொகை பெறும் வீட்டு விசேஷங்களை நடத்தி விருந்துகள் வைப்பது வழக்கம். இந்நிலையில் முக்கிய பகுதியான செல்லூரைச் சேர்ந்த ஒருவர், தான் விசேஷத்தில் செய்த மொய் விருந்தை யாரும் தனக்குச் செய்வதாக நினைத்து, பிள்ளைகளுக்கு செய்து, அது பிரிந்து வாழும் மனைவிக்கு போய் சேர்ந்து விடக்கூடாது என்ற வகையில் இந்த போஸ்டரை ஒட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டுச்சண்டை வீதிக்கு வந்து, வித்தியாசமான முறையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த வித்தியாச போஸ்டர் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: