9 தொகுதிகளில் வென்றதால் எடப்பாடிக்கு வாழ்த்து: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர், வேட்பாளர்களுக்கு தேமுதிக சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: