ஒடிசா, ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்கும் நவீன், ஜெகன் மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஒடிசா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவீன் பட்நாயக் மற்றும் ஆந்திர முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று முதல்வர் பதவி மூலம் தென்னிந்தியா மற்றும் ஆந்திர மாநிலத்தை உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோன்று, ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அந்த மாநிலத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வார் என்பது எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: