×

பொள்ளாச்சி விவகாரம்: கைதான 5 பேர் எதிராக முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ..!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், உள்ளிட்ட 5 பேரை போலீசார்  கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27ம் தேதி சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சிபிஐ  அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

இதுவரை சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் மீண்டும் முதலில் இருந்து விசாரணையை தொடங்கினர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்;
தற்போது இறுதியாக முதல் குற்றப்பத்திரிக்கையை திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேருக்கு எதிராக போயம்புத்தூர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் என்ற அடைப்படையில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வீடியோவை எடுத்து, பெண்ணை மிரட்டி, பணம் பறிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் நடந்திருப்பதாகவும் அவர்கள் இந்த முதல் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த விசாரணையில் விசாரணை நிறைவு பெற்றவுடன் அடுத்தக்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.


Tags : Pollachi ,CBI , Pollachi, court, indictment, filing, CBI
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!