டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 16வது மக்களவையை கலைத்து 17வது மக்களவையை ஏற்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.