மக்களவை தேர்தலில் படுதோல்வி எதிரொலி: பல மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா
பெங்களூர்: அமேதியில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக, ஒடிசா மாநில காங்கரஸ் தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளை தொடர்ந்து காங். தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.