×

ராகுல்காந்தி உள்ளிட்டோரை இந்துக்களுக்கு எதிரி என்பது போல காட்டினார்கள் : திருமாவளவன்

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர் என்று கூறினார். அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி என முன்பேகூறியதாக குறிப்பிட்ட திருமாவளவன், தேசிய அளவில் எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்து விட்டது என்றும் வட மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவதில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்தது, ஐயத்தை ஏற்படுத்தியது என்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோரை இந்துக்களுக்கு எதிரி என்பது போல காட்டினார்கள் என்றும் கூறினார்.மேலும் தமிழகத்தில் சாதி, மத வெறியர்களுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் நிரூபித்து விட்டனர் என்றும் கூறினார். 


Tags : Rahulkanthi ,Thirumavalavan , Vigika, leader, Thirumavalavan, parliamentary election, Rahul Gandhi
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...