டெல்லி : கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு நன்மை செய்துள்ளது பாஜக அரசு என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி பேட்டியில் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்று தான் மக்கள் மீண்டும் வாக்களித்துள்ளனர் என்று கூறிய சுப்ரமணிய சுவாமி, இந்துத்துவா கொள்கை மூலம் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம் என்றும் தமிழகத்தில் தினகரன் பல சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை சந்தித்துள்ளார் என்றும் கூறினார்.