சென்னை : திமுக எம்.பி. கனிமொழி மீது முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018ம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜூன்4ம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.